தொடருந்து விபத்தில் சிக்கி ஒருவர் பலி
கொஸ்கொட (Koskoda) - காவல்துறை பிரிவிற்குட்பட்ட மஹா இந்துருவ தொடருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள தொடருந்து கடவையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து இன்று (19) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருகையில், காலியில் (Galle) இருந்து கொழும்பு (Colombo) நோக்கி பயணித்த தொடருந்து கொஸ்கொடவில் இருந்து விறகு ஏற்றிச் சென்ற பாரவூர்தியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இந்த விபத்தில் பாரவூர்தியில் பயணித்த இருவரில், இந்துருவ பிரதேசத்தை சேர்ந்த 55 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த மற்றைய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது நிலைமை மோசமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |