சகோதரியின் நகையைத் திருடி இளைஞன் செய்த செயல் - யாழில் இடம்பெற்ற சம்பவம்!
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
Crime
By Pakirathan
சகோதரியின் நகையைத் திருடிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண்ணொருவர் வீட்டில் இருந்த தனது 05 பவுண் நகை களவு போயுள்ளதாக கோப்பாய் காவல்நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டிற்கமைய, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவரது சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம், கோப்பாய் காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பகுதி ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
காவல்துறை விசாரணை
குறித்த இளைஞன் தனது சகோதரியின் 05 பவுண் நகையை திருடி, அதனை அடகு வைத்து மோட்டார் சைக்கிள் மற்றும் கைத்தொலைபேசி வாங்கியுள்ளதாக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, இந்த இளைஞன் போதைப்பொருளுக்கு அடிமையாகி சிறைத் தண்டனை அனுபவித்து பின்னர் விடுதலையானவர் எனவும் கூறப்படுகின்றது.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 6 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி