யாழ்ப்பாணத்தில் இப்படியும் ஒரு காவல்துறை அதிகாரி
Sri Lanka Police
Jaffna
Money
By Theepan
தொலைந்து போன யாழ்ப்பாண வாசியின் பணப் பையை யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஜெயமகா கண்டெடுத்து உரியவரிடம் கையளித்த சம்பவமொன்று நடைபெற்றது.
யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் வசிக்கும் ஒருவர் புத்தளம் பகுதியில் ரூபா 30 ஆயிரம் பணத்துடன் தனது பணப் பையை தொலைத்து விட்டு தேடி அலைந்துள்ளார்.
வீதியில் விழுந்து கிடந்த பணப்பை
பணி நிமித்தம் புத்தளத்திற்கு சென்ற யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர், பணப் பையொன்று வீதியில் விழுந்து கிடைப்பதை அவதானித்து அதனை எடுத்து விசாரணை மேற்கொள்ளுமாறு பணித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த பணப்பைக்குள் இருந்த ஆவணங்களை கொண்டு அது யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்திய சிரேஷ்ட காவல்துறைஅத்தியட்சகர் அதனை இன்றையதினம் தொலைத்த பணப்பை உரிமையாளரிடம் கையளித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |