விறகு தேடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி பலி - நுவரெலியாவில் சோகம்
லிந்துலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட வோல்ட்றீம் தோட்டத்தில் காட்டுக்கு விறகுதேடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
தலவாக்கலை, கொத்மலை நீர்த்தேக்கத்துக்கு நீரேந்திச் செல்லும் எல்ஜின் ஓயாவில் மூழ்கியே அவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் லிந்துலை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட சென் கூம்ஸ் தோட்டத்தின் கீழ் பிரிவைச் சேர்ந்த 20 வயதுடைய பிரபாகரன் கஜேந்திரன் என்பவரேயாவார்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது
இத்தோட்டத்தில் உள்ள மேலும் இரு இளைஞர்களுடன் சேர்ந்து இவர் விறகு தேடச்சென்றுள்ளார்.
அவ்வேளையில் எல்ஜின் ஓயாவில் சிலர் குளித்துக்கொண்டிருந்துள்ளனர். அதனைக் கண்டு குறித்த இளைஞனும் ஓயாவில் இறங்கிய போதே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளார்.
இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல்போன இளைஞனை காவல்துறையினரும்,பிரதேச மக்களும் இணைந்து தேடி மீட்டனர்.
மேலதிக விசாரணை
இது குறித்து மேலதிக விசாரணைகளை லிந்துலை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.