சந்தேகத்திற்கிடமான 270 இலட்சம் ரூபாவுடன் இரு சந்தேகநபர்கள் கொழும்பில் கைது!
கொழும்பு கொம்பனித்தெரு காவல்துறை பிரிவிற்குட்பட்ட பார்க் வீதிக்கு அண்மையில், ரூ. 270 இலட்சம் பணத்துடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு மத்திய பிராந்திய குற்றவியல் விசாரணைப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் படி குறித்த சந்தேக நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இரு சந்தேக நபர்கள் அவர்கள் பயணித்த வாகனத்துடன் கைது செய்யப்பட்டு கொம்பனித்தெரு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
270 லட்சங்களுடன் சந்தேக நபர்கள் கைது
சந்தேகநபர்களிடமிருந்து கைப்பெற்றபட்ட பணத்திற்கு அவர்கள் சரியான காரணத்தை கூற தவறி உள்ளதாக காவல்துறை விசாரணைகளில் தெரிவித்துள்ளது.

இதனால், இந்தப் பணம் திட்டமிடப்பட்ட குற்றச்செயல், போதைப்பொருள் கடத்தல், ஆயுத வர்த்தகம் அல்லது வேறு ஏதேனும் சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் பெறப்பட்டதா என்பது குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கைது செய்யப்பட்ட நபர்கள், 59 மற்றும் 54 வயதுடையவர்கள் என்றும் சங்கமித்தா மாவத்தை மற்றும் கிராண்ட்பாஸ் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இதன்படி கைது செய்யபட்ட நபர்கள் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கறுப்பு ஜூலை: குருதியாலும் ஆடைகளின்றியும் நடந்த இனப்படுகொலை... 6 மணி நேரம் முன்