தமிழர் தலைநகரில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை
Sri Lanka Police
Trincomalee
Sri Lanka Police Investigation
By Sathangani
திருகோணமலை (Trincomalee) மூன்றாம் கட்டை பகுதியில் இளைஞரொருவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (03) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது திருகோணமலை கிருஷ்ண கோயில் வீதியில் வசித்து வந்த 33வயதான தேனுவர ஹென்றிகே விநோத் என்பவரே உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
காவல்துறையினர் விசாரணை
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, ஏற்கனவே இருந்து வந்த தகராறு காரணமாக குறித்த இளைஞர் தாக்கப்பட்டு இருக்கலாம் எனவும் சந்தேகிக்கின்றனர்.
உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இது குறித்த மேலதிக விசாரணைகளை திருகோணமலை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்