திருகோணமலை வீதியில் கோர விபத்து - இருவர் படுகாயம்
Sri Lanka Police
Trincomalee
Sri Lanka Police Investigation
Accident
By Independent Writer
திருகோணமலை (Trincomalee) - திருஞானசம்பந்தர் வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து சற்று முன்னர் திருகோணமலை - திருஞானசம்பந்தர் வீதியில் கடல்முக சந்திக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
மோட்டார் சைக்கிள் மற்றும் வான் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் படுகாயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் விபத்து குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி