மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை,மகள் மீது அசிட் வீச்சு
Sri Lanka
Sri Lanka Police Investigation
Crime
By Sumithiran
முல்லேரியா, அம்பத்தலே பிரதேசத்தில் இன்று (ஒக்டோபர் 11) காலை தந்தை மற்றும் அவரது மகளும் அசிட் வீச்சுக்கு இலக்காகியுள்ளனர்.
தந்தை-மகள் இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது இந்த அசிட் வீச்சு இடம்பெற்றுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
வீதியில் நின்ற ஒருவரால்
வீதியில் நின்ற ஒருவரால் இந்த அசிட் வீச்சு நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

படுகாயமடைந்த தந்தை கொழும்பு கண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, மகள் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
மேலதிக விசாரணைகளை
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்