அரசியலுக்கு வருவது குறித்து முடிவெடுக்க வேண்டியுள்ளது..! நடிகை தமிதா பகீர் அறிவிப்பு
இந்த நாட்டிற்காக உழைக்க விரும்புவோருக்கு ஒரு வாய்ப்பை வழங்குவதற்கான தேர்தலுக்கு தற்போது சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக நடிகை தமிதா அபேரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்தார்.
சுதந்திரமாக நிற்கும்போது அவ்வளவு அதிகமாக தாக்கப்படுகிறோம்
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தனக்கு நேர்ந்த அநீதியால் அரசியலுக்கு வருவது குறித்து முடிவெடுக்க வேண்டியுள்ளதாக குறிப்பிட்டார்.
இது தொடர்பில் விரைவில் தாம் முடிவெடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சுதந்திரமாக நிற்கும்போது அவ்வளவு அதிகமாக தாக்கப்படுகிறோம்.
இந்தநிலையில் அரசியலுக்கு எவ்வாறு செயற்வர முடிவு செய்தால் எவ்வாறு செயற்படவேண்டும் தாம் இன்னும் தீர்மானிக்கவில்லை என்று தமிதா தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டைப் பற்றி இன்னும் சிந்திக்கும் அரசியல்வாதிகள் நாடாளுமன்றத்தில்
குறைவு. எனினும் நாடாளுமன்றத்திற்கு வெளியே பல புத்திஜீவிகள் உள்ளனர் என்று
அவர் கூறியுள்ளார்.