கட்டுநாயக்கவிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ள மேலதிக விமான சேவை
Bandaranaike International Airport
Sri Lanka
Dubai
By Sumithiran
எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் டிசம்பர் முதலாம் திகதி முதல் துபாய்க்கும் கட்டுநாயக்கவுக்கும் இடையில் மேலதிக விமானங்களை சேவையிலீடுபடுத்த தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அதன்படி கொழும்புக்கும் டுபாய்க்கும் இடையிலான தினசரி பயணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளின் கோரிக்கை

பயணிகளின் கோரிக்கைகளை பரிசீலித்து டிசம்பர் 1ம் திகதி முதல் கூடுதல் பயணத்தை எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் தீர்மானித்துள்ளது.
அதன்படி, கொழும்புக்கும் துபாய்க்கும் இடையே தினசரி இரண்டு நேரடி விமானங்கள் இயக்கப்படும், மேலும் ஒரு விமானம் மாலைதீவு, மாலே வழியாகச் இயக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி