அதிபர் ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள பணிப்புரை

Ranil Wickremesinghe Government Of Sri Lanka Sri Lankan Peoples
By Vanan Sep 09, 2023 12:45 AM GMT
Report

இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை மற்றும் பாதுகாப்பு தொடர்பான தேசிய கொள்கையைத் தயாரிப்பது தொடர்பான வரைவுகளை இவ்வருட இறுதிக்குள் தயாரிக்குமாறு உரிய அமைச்சர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அரசாங்கங்கள் மாறினாலும், கொள்கைகளை நிலையாகப் பேணுவது அவசியமானது என்றும், காலத்திற்கு காலம் மாறும் கொள்கைகளால் ஒரு நாடு ஒருபோதும் முன்னேற முடியாது என்றும் அதிபர் வலியுறுத்தினார்.

நேற்று (08) முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்ற தேசிய மதிப்பீட்டுக் கொள்கை அறிமுக நிகழ்விலேயே அதிபர் ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

தேசிய மதிப்பீட்டுக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான கட்டமைப்பு, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவினால் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

கொள்கை வகுப்பில் தவறியது சிறிலங்கா - கஜேந்திரகுமார் வெளிப்படை

கொள்கை வகுப்பில் தவறியது சிறிலங்கா - கஜேந்திரகுமார் வெளிப்படை

தேசிய மதிப்பீட்டுக் கொள்கை

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அதிபர் ரணில் விக்ரமசிங்க, நாட்டில் செயற்திறனான நிர்வாகத்தை ஸ்தாபிப்பதில் ஒரு முக்கியமான தருணத்தை குறிக்கும் வகையில், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட தேசிய மதிப்பீட்டுக் கொள்கை அமுலாக்க வரைவை வெளியிடும் வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது.

அதிபர் ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள பணிப்புரை | Address Given By President Ranil Wickramasinghe

2017ஆம் ஆண்டு முன்மொழியப்பட்ட இந்தக் கொள்கை 2018 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கலந்துரையாடப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அது இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

07 வருடங்களின் பின்னர் இன்று இந்த தேசிய கொள்கை அமுலாக்க வரைவை வெளியிடுவது அரசாங்கத்தின் திட்டங்கள் மற்றும் கொள்கைகளின் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்துவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக குறிப்பிடலாம்.

தேசிய மதிப்பீட்டுக் கொள்கையைச் செயல்படுத்துவதில் நிதி அமைச்சு மற்றும் திட்ட முகாமைத்துவத் திணைக்களத்துக்கு முக்கிய பொறுப்பு உள்ளது.

அரச கொள்கைகளின் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்தி, மூன்று மொழிகளிலும் இந்தப் புதிய கொள்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சீனா, இந்தியாவுடனான உறவு தொடர்பில் ரணில் வெளியிட்ட தகவல்

சீனா, இந்தியாவுடனான உறவு தொடர்பில் ரணில் வெளியிட்ட தகவல்

மேலும், அரசாங்கத்தின் அதிக செலவீனங்களைக் கொண்ட பத்து அமைச்சுகளின் செலவுகள் குறித்த பகுப்பாய்வு தற்போது இடம்பெற்று வருகின்றது.

இந்த வருட இறுதிக்குள் வெளிவிவகாரக் கொள்கை வரைவைத் தயாரிக்குமாறு வெளிவிவகார அமைச்சருக்கு நான் பணிப்புரை விடுத்துள்ளேன்.

அத்துடன், நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக நீண்டகாலமாக அவதானத்தைப் பெற்றுவந்த தேசிய பாதுகாப்புக் கொள்கையை தயாரிக்குமாறும் பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய மேற்படி அமைச்சின் செயற்பாடுகளை பின்பற்றி ஏனைய அமைச்சுக்களும் தேசிய கொள்கை கட்டமைப்பை பின்பற்ற வேண்டும்.

நாட்டின் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக அமைச்சுக்கள் மட்டத்தில் தேசிய கொள்கைகளை திறம்பட செயல்படுத்துவது அவசியமானது. அது திட்டமிடல் மற்றும் செயல்படுத்தலின் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நிவர்த்திக்கவும் உதவியாக அமையும்.

ஏழு வருடங்களுக்கு முன்னர் தேசிய மதிப்பீட்டுக் கொள்கையின் தேவை குறித்து கவனம் செலுத்தப்பட்டது. அதனை நனவாக்க அர்ப்பணிப்புக்களை செய்த அனைவரையும் பாராட்டுகிறேன்.

நிலையான தேசியக் கொள்கை இல்லாதது நாட்டின் ஆட்சி முறையில் காணப்படும் மிகப்பெரிய குறைப்பாடாகும். தேசியக் கொள்கை கட்டமைப்பை நடைமுறைப்படுத்துவதற்காக நாடாளுமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவிற்கு பெரும் பொறுப்பு உள்ளது.

இந்தக் கொள்கைகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டியதும் அவசியமாகும். அரசாங்க நடவடிக்கைகள் தொடர்பில் வலுவான மதிப்பீடு மிகவும் முக்கியமானது.

புடினின் ரகசியங்கள் அறிந்தவர் திடீர் மாயம் : ரஷ்யாவில் புதிய அதிர்வு

புடினின் ரகசியங்கள் அறிந்தவர் திடீர் மாயம் : ரஷ்யாவில் புதிய அதிர்வு

நிலையான சூழலை பேணல்

தேசிய மதிப்பீட்டுக் கொள்கையை வலுவாக நடைமுறைப்படுத்த அரச அதிகாரிகளின் அர்ப்பணிப்பும் அவசியம். அரச சேவைக்குள் ஒழுக்கத்தையும் ஒழுங்குமுறைகளையும் உருவாக்குவதே இதன் மற்றுமொரு நோக்கமாகும்.

அதிபர் ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள பணிப்புரை | Address Given By President Ranil Wickramasinghe

பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கான நிலையான சூழலை பேணவும் அரசாங்கங்கள் மாறினாலும் நிலைக்கூடியதாக இந்த கொள்கைகள் அமைய வேண்டும்.

இலங்கை இந்தக் கொள்கையுடன் முன்னோக்கிச் செல்லும் போது, ​​தேசியக் கொள்கைகள் தொடர்பில் அதிக இணக்கப்பாடு ஏற்படும் என்றும் அதன் பலனாக விரிவான தேசிய கொள்கை ஒன்றுக்காக வரைவு உருவாவதற்கு சந்தர்ப்பம் ஏற்படும் எனவும் நம்புகிறோம்.

இந்த தேசிய கொள்கைகளுடன் முன்னோக்கி செல்லும் வழியை திட்டமிடும் தருணத்தில் கடன் நீடிப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளும் முன்னேற்கரமாக அமைந்துள்ளமை மகிழ்ச்சிக்குரியது.

ஐ.நாவில் 'சனல் 4' முக்கிய ஆதாரங்கள்! விழிபிதுங்கி நிற்கும் ராஜபக்சர்கள்

ஐ.நாவில் 'சனல் 4' முக்கிய ஆதாரங்கள்! விழிபிதுங்கி நிற்கும் ராஜபக்சர்கள்

இதன்போது, அரச நிதிக் குழு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் கடுமையான விமர்சனங்கள் மற்றும் சிக்கல்களுக்கு மத்தியில் குறிப்பிடத்தக்க இணக்கப்பாடுகளை எட்டவும் முடிந்துள்ளது." என்றும் தெரிவித்தார்.

ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வெள்ளவத்தை

30 Oct, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Toronto, Canada

31 Oct, 2022
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வட்டகச்சி, பேர்ண், Switzerland, பரிஸ், France

11 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் மேற்கு, கரம்பன், கொழும்பு, சுவிஸ், Switzerland, கொழும்பு சொய்சாபுரம்

01 Nov, 2023
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Northolt, United Kingdom

28 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சரவணை மேற்கு, வெள்ளவத்தை

31 Oct, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வெள்ளவத்தை

01 Nov, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Hannover, Germany

30 Oct, 2023
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
நன்றி நவிலல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024