சுமார் 5700 ஏக்கர் பெரும்போக விவசாயம் பாதிப்பு!
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக அதிகளவிலான வயல் நிலங்கள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளன என மன்னார் மாவட்ட கமநல திணைக்களத்தின் உதவி ஆணையாளர் ஏ.மெரின் குமார் தெரிவித்தார்.
2021 - 2022 ஆம் ஆண்டிற்கான பெரும்போக பயிர்ச் செய்கையில் சுமார் 5700 ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 2580 ஏக்கர், முசலி பிரதேச செயலாளர் பிரிவில் 990 ஏக்கர், நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 180 ஏக்கர் மற்றும் மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவில் 560 ஏக்கர் விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் மொத்தமாக 5700 ஏக்கர் வயல் நிலங்கள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளன.
வட மாகாணத்தின் 2 ஆவது மிக பெரிய குளமான முருங்கன் கட்டுக்கரை குளத்தில் 11.5 அடி நீர் காணப்படுவதோடு, தற்போது நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
மேலும் கட்டுக்கரை குளத்தின் மேலதிக நீர் வெளியேறும் பகுதி ஊடாக 4 இஞ்சி அளவில் நீர் வெளியேறுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.








புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்… 3 மணி நேரம் முன்
