ஏயார்பஸ் கொடுக்கல் வாங்கல் மோசடி! வெளிநாட்டில் தலைமறைவாகிய கபிலவின் மனைவி
ஏயார்பஸ் கொடுக்கல் வாங்கல் மோசடியுடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களை வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு அழைத்து வருவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பாக சிறிலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவி மற்றும் நிமல் பெரேரா என்ற நபர் ஆகியோரைக் கைது செய்ய லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு எதிர்பார்த்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக அவர்களுக்கு எதிராக சர்வதேச சிவப்பு எச்சரிக்கையைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கபில சந்திரசேனவின் இறுதிச் சடங்கு
இந்த ஊழல் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விடுதலையான கபில சந்திரசேனவின் மனைவி, பின்னர் அவுஸ்திரேலியாவிற்குத் தப்பிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

அண்மையில் மர்மமான முறையில் உயிரிழந்த தனது கணவர் கபில சந்திரசேனவின் இறுதிச் சடங்கிலும் அவர் கலந்துகொள்ளவில்லை எனத் தெரியவருகிறது.
இவ்வாறானதொரு பின்னணியில், உயிரிழப்பதற்கு முன்னதாக கபில சந்திரசேன வழங்கிய வாக்குமூலங்களில் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
போலி சாரதி அனுமதிப்பத்திரம் தயாரித்த யாழில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகத்தர் மட்டக்களப்பில் கைது
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |