முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநருக்கு நீதி மன்ற அழைப்பாணை
Central Bank of Sri Lanka
Sri Lanka Economic Crisis
Sri Lanka Magistrate Court
By Kiruththikan
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலை ஜூன் 7 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கோட்டை நீதவான் நீதிமன்று அழைப்பாணை அனுப்பியுள்ளது.
அத்தோடு, கப்ராலுக்கு புதிய பயணத் தடையை கோட்டை நீதவான் நீதிமன்றம் திங்கட்கிழமை (25) விதித்துள்ளதுடன், இந்த தடை உத்தரவு விசாரணை முடியும் வரை நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவித்தது.
மேலும் கப்ரால் தனது கடவுச்சீட்டையும் நீதிமன்றில் ஒப்படைக்குமாறும் உத்தரவிடப்பட்டது.
மரண அறிவித்தல்