கண்டியில் மட்டுப்படுத்தப்படும் மதுபாவனை: நடைமுறையாகும் சிறப்பு திட்டம்
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெறவிருக்கும் புனித தந்த தாதுவின் கண்காட்சியின் போது மதுபானம் பயன்படுத்துவதையும் விற்பனை செய்வதையும் தடுக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இது கலால் திணைக்கள ஆணையர் ஜெனரல் யு.எல். உதய குமார கூறுகையில், “இந்த கண்காட்சி நாளை (18) தொடங்கி 10 நாட்களுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
முப்படைகளின் ஆதரவுடன் கலால் திணைக்களத்தினால் ஒரு சிறப்பு திட்டம் தொடங்கப்படும்.
மேலதிக அதிகாரிகள் குழு
மேலதிகமாக மத்திய மாகாண கலால் ஆணையர் திஸ்ஸ குமார ராஜபக்ச தலைமையிலான சிறப்பு கலால் குழுக்கள் நிகழ்வு முழுவதும் நிறுத்தப்படும்.
கொழும்பு, வட மத்திய மாகாணம் மற்றும் வடமேற்கு மாகாணத்தில் உள்ள சிறப்பு பிரிவுகளிலிருந்து கூடுதல் செயல்பாட்டு குழுக்கள் நியமிக்கப்படும்.” என்றார்.
இதன்படி, பொதுமக்கள் ஏதேனும் மீறல்கள் குறித்து கலால் திணைக்களத்திற்கு அவசர தொலைபேசி எண் 1913 அல்லது பின்வரும் தொலைபேசி எண்கள் ஊடாக தொடர்பு கொள்ள முடியும் : 071 439 5603 மற்றும் 071 800 8029.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
