இஸ்ரேல் வான்வெளி முற்றிலும் முடக்கம்: ஈரான் தாக்குதலால் அதிர்ச்சி
இஸ்ரேலில் (Israel) வான்வெளி மற்றும் விமான நிலையங்கள் முழுமையாக மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பை இஸ்ரேலிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகஙகள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானுடனான போர் பதற்றத்திற்கு மத்தியில், இஸ்ரேல் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
வான்வழித் தாக்குதல்
மேற்கு ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை ஆரம்பித்ததாக இன்று இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்த சில மணிநேரங்களிலேயே ஈரான் அதன் பழிவாங்கலை ஆரம்பித்தது.
இந்தநிலையில், ஈரானின் குறித்த தாக்குதலில் இஸ்ரேலின் தேசிய அவசர சேவை, வடக்கு இஸ்ரேலின் ஹைஃபாவில் ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து குறைந்தது நான்கு பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவித்தது.
தாக்கத்தில் வெடிப்புகள்
அத்தோடு, ஹைஃபாவில் எறிகணைகள் தரையிறங்கியதாகவும், அதன் தாக்கத்தில் வெடிப்புகள் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியன.
இந்நிலையிலேயே, பாதுகாப்பு கருதி இஸ்ரேலிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம், வான்வெளி மற்றும் விமான நிலையங்களை முழுமையாக மூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
