மீண்டும் முதல்வராக எடப்பாடி..! அடித்துக் கூறும் உறுப்பினர்: திமுக தரப்பின் நிலைப்பாடு
தமிழகத்தில் நிலவும் அரசியல் இழுபறிக்கு இடையே, எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராவார் என அதிமுக மாநிலங்கவை உறுப்பினர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
சில ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன, அதையெல்லாம் வெளியே சொல்ல முடியாது என தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
அதிமுக எம்எல்ஏக்கள் சென்னைக்கு வந்துக் கொண்டிருக்கும் நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்குச் சென்று அவருடன் தம்பிதுரை எம்பி ஆலோசனை நடத்தினார்.
மீண்டும் அதிமுக ஆட்சி
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, "தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக உள்ளது.

மக்கள் எங்களைத்தான் எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் எங்களது அடுத்தகட்ட நகர்வுகள் இருக்கும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
இணைய வாய்ப்பில்லை
திமுகவும் அதிமுகவும் இணைய வாய்ப்பில்லை என திமுக நிர்வாகி டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் எதிர் எதிர் துருவங்கள் என்றும் எதிர்க்கட்சியாக திமுக எப்படி செயல்பட வேண்டும் என்பதற்காகவே ஆலோசனை நடப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
திமுக மற்றும் அதிமுக இடையே கூட்டணி அமைவது சாத்தியமா என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |