சிக்கலில் மத்திய கிழக்கு வான்வழி: இடைநிறுத்தப்பட்ட விமானங்கள்
யுனைடெட் ஏர்லைன்ஸ் மற்றும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஆகியவை மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானங்களை இடைநிறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல் (Israel) மற்றும் ஈரான் (Iran) இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், நியூவார்க் மற்றும் துபாய் இடையேயான யுனைடெட்டின் தினசரி விமானங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
விமான நிலையம்
அத்தோடு, இடையூறுகளின் போது நிலைமையைக் கண்காணித்து வாடிக்கையாளர்களுடன் இணைந்து பணியாற்றும் என்று யுனைடெட் தெரிவித்துள்ளது.
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் தோஹா, கத்தார் மற்றும் பிலடெல்பியா சர்வதேச விமான நிலையத்திற்கு இடையிலான அதன் அட்டவணையை ஜூன் 22 வரை மாற்றியமைத்துள்ளது.
நடவடிக்கை
தோஹாவிலிருந்து பிலடெல்பியாவிற்கு ஒரு விமானம் வியாழக்கிழமை அதிகாலை புறப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பை மனதில் கொண்டு நிலைமையை நாங்கள் தொடர்ந்து கண்காணிப்போம், மேலும் தேவைக்கேற்ப எங்கள் செயல்பாட்டை மேலும் சரிசெய்வோம் என்று அமெரிக்கா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
