தீ விபத்துடன் வெளியேறிய அமெரிக்க போர் கப்பல்! அமெரிக்காவுக்கு பேரிடி
ஈரானுடனான மோதல் களத்தில் இருந்து அமெரிக்காவினால் உருவாக்கப்பட்ட விலை உயர்ந்த போர்க்கப்பல் விலக்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பல் ஒரு வருடம் வரை போர்ப் பணிகளில் இருந்து விலகி இருக்க நேரிடலாம் என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் விமானம் தாங்கி கப்பலின் சில பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விலை உயர்ந்த போர்க்கப்பல்
அமெரிக்காவினால் உருவாக்கப்பட்ட விலை உயர்ந்த போர்க்கப்பல் உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலாக கூறப்படும், USS Gerald R Ford, 1,106 அடி நீளம் கொண்டதாகும்.

இதற்கு காரணம் சுற்றுச்சூழலுக்கு உகந்த கழிப்பறைகள் சரியாக செயல்படாதது முதல், கப்பலின் சில பகுதிகளில் பரவிய தீ விபத்து வரை என தொடர்ச்சியான தொழில்நுட்பக் கோளாறுகள் என்று கூறப்படுகிறது.
ஈரானுக்கு எதிரான போர்ப் பணிகளில் இணைந்த வெறும் இரண்டு வாரங்களிலேயே அங்கிருந்து திரும்பப் பெறப்பட்டது.
இந்நிலையில், தற்போது பழுதுபார்ப்புப் பணிகளுக்காக செங்கடலை விட்டு வெளியேறி, Crete தீவில் நங்கூரமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
கழிவு நீர் அடைப்புகள் மற்றும் பழுதுபார்ப்புப் பணிகளுக்காகவே இதுவரை குறைந்தது 4 மில்லியன் டொலர்கள் இந்த கப்பலுக்காக செலவழிக்கப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டிலிருந்து இதன் சுகாதார அமைப்பில் தொடர் கோளாறுகள் இருந்து வருகின்றன. இதுபோல் பல ஆண்டுகளாகவே இக்கப்பல் பல்வேறு சிக்கல்களால் அவதிப்பட்டு வருகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |