கனடாவில் இலங்கை தமிழருக்கு புதிய பொறுப்பு
கனடாவில் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள இலங்கை தமிழருக்கு புதிய பொறுப்பை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வழங்கியுள்ளார்.
அதன்படி நீதித்துறை அமைச்சர் மற்றும் தலைமை சட்டத்தரணிக்கு நாடாளுமன்ற செயலாளராக கேரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) நியமிக்கப்பட்டுள்ளார்.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் நடந்த கனேடிய பொது தேர்தலில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட இலங்கை தமிழரான கேரி ஆனந்தசங்கரி பெரிய வெற்றியை பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.
இந்த நிலையில் கேரி ஆனந்தசங்கரிக்கு மேலும் ஒரு முக்கிய பொறுப்பை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. இந்த வாய்ப்பை வழங்கிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
I am honoured to be appointed as Parliamentary Secretary to the Minister of Justice & Attorney General of Canada. I look forward to working alongside Minister @DavidLametti to advance justice, equality & reconciliation in Canada?? Thank you for this opportunity @JustinTrudeau ? https://t.co/R9aLzqlVxi
— Gary Anandasangaree (@gary_srp) December 3, 2021