தமிழக அரசியலில் பரபரப்பு- பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை: புதிய கட்சி அறவிப்பு...!
தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை, பாரதிய ஜனதா கட்சியிலிருந்து முழுமையாக விலகும் தனது இறுதி முடிவை டெல்லி மேலிடத்திடம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் இளம் ஐ.பி.எஸ். அதிகாரியாக, அதிரடி காட்டிய அண்ணாமலை, அந்தப் பதவியை பதவி விலகல் செய்துவிட்டு 2020-ம் ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்தார்.
தனது பேச்சால் இளைஞர்களை ஈர்த்த அவர், குறுகிய காலத்திலேயே தமிழக பா.ஜ.க. தலைவராக நியமிக்கப்பட்டார்.
அ.தி.மு.க. கொடுத்த அழுத்தம்
2024-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் பா.ஜ.க.வின் வாக்கு வங்கி 11 சதவீதம் என்ற அளவுக்கு உயர்ந்தது.

ஆனால், திடீரென 2026 சட்டசபை தேர்தலுக்கு முன்பாக தமிழக பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்து அண்ணாமாலை மாற்றப்பட்டார். இதற்கு அ.தி.மு.க. கொடுத்த அழுத்தம் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், அண்ணாமலையின் ஆதரவாளர்கள் அவரை தனிக்கட்சி தொடங்கக் கோரி வலியுறுத்தி வந்தனர். அவரும் பதில் எதுவும் சொல்லாமல் அமைதி காத்து வந்தார்.
புதுக் கட்சி தொடங்கப் போகிறீர்களா என்று சென்னையில் செய்தியாளர்கள் கேட்டதற்கு "இன்னும் 2 நாட்களில் எல்லாவற்றைப் பற்றியும் பேசுகிறேன்" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
டெல்லியை விட்டு வெளியேற வேண்டாம்
இதுதொடர்பாக அண்ணாமலை ஆதரவாளர்கள் கூறும்போது “தமிழகத்தில் பாஜக வளர்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் அண்ணாமலை. 2024 மக்களவைத் தேர்தலில் தனி அணியாக பாஜக பெற்ற வாக்குகளைவிடஇ இந்த சட்டப்பேரவை தேர்தலில் மிகவும் குறைவான வாக்குகளைத்தான் பாஜக பெற்றுள்ளது என்றனர்.

அண்ணாமலை கட்சி தொடங்கினால் அடுத்து வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் விஜய் - அண்ணாமலை என்றே அரசியல் களம் இருக்கும் என்கின்றனர் அரசியல் ஆர்வலர்கள்.
இருப்பினும், அண்ணாமலையை தொடர்ந்து கட்சியில் நீடிக்கச் செய்வதற்கான முயற்சிகளை பாஜக தலைமை இன்னும் பரிசீலித்து வருகிறது, மேலும் அவருக்கு ஒரு தேசிய அளவிலான பொறுப்பும் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்த அறிவிப்பு வரும் வரை டெல்லியை விட்டு வெளியேற வேண்டாம் என்று அண்ணாமலையிடம் பாஜக தலைமை கேட்டுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |