புதிய மாணவர்களை இணைத்தல்! கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு
2022ஆம் ஆண்டில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பம் மற்றும் ஆலோசனை கோவை கல்வி அமைச்சினால் வௌியிட்டுள்ளது. கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
மாணவர் அனுமதிக்கான விண்ணப்பப் படிவத்தை www.moe.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக தரவிறக்கம் செய்ய முடியும் என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதி 6 வயதோ அல்லது அதற்கு அதிகமான வயதெல்லையை கொண்ட மாணவர்களை முதலாம் தரத்திற்கு இணைத்துக் கொள்வதானது 6 வயதிற்கு குறைவான மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டதன் பின்னரே முன்னெடுக்கப்படும்.
முதலாம் தரத்திற்கு நேர்முக பரீட்சை ஊடாக 35 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவதுடன், முப்படை மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 5 பிள்ளைகளையும் இணைத்துக்கொள்ள முடியும். வகுப்பறை ஒன்றிற்கு 40 மாணவர்களை மாத்திரம் உள்வாங்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளன.