மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பில் ஆணைக்குழுவின் நிலைப்பாடு
நாடாளுமன்றத்தால் மாகாண சபைத் தேர்தல் சட்டம் திருத்தப்படும் வரை, தேர்தல்களை நடத்துவது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எந்த அதிகாரமும் இல்லை என அதன் தலைவர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முழு அதிகாரங்களும் கிடைத்த பின்னர், மாகாண சபைத் தேர்தல்களை மாகாண மட்டத்தில் தனித்தனியாக நடத்துவதா அல்லது ஒன்றாக நடத்துவதா என்பது தீர்மானிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த மாகாண சபைத் தேர்தல்கள் இவ்வாறு தனித்தனியாக நடத்தப்பட்ட சந்தர்ப்பங்களும் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் சட்டம்
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், "மாகாண சபைத் தேர்தல்கள் பழைய முறையில் நடத்தப்பட வேண்டுமானால், சட்டத்தில் சேர்க்கப்பட்ட திருத்தத்தை நீக்க வேண்டும்.
எதிர்வரும் ஆண்டு (2026) மாகாண சபைத் தேர்தலுக்காக ஐந்து அல்லது ஆறு பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த ஆண்டும் தேர்தல்களுக்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த ஆண்டு தேர்தல்கள் நடத்தப்படாவிட்டால், அந்தப் பணம் கருவூலத்திற்குத் திருப்பி அனுப்பப்படும் என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
