அடுத்த தேர்தலுக்காக அரங்கேறும் இன்னொரு குண்டுத் தாக்குதல்: எச்சரிக்கும் எதிர்கட்சி எம்.பி
2024 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலுக்கு முன்னர் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் போன்று இன்னொரு தாக்குதல் நடத்தப்படலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா எச்சரித்துள்ளார்.
மேலும், 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்குப் காரணமாக இருந்தவர்கள் யாரேனும் தலைமறைவாக இருந்தால், விரைவில் கைது செய்யப்பட வேண்டும் என்றும் அவர்கள் சுதந்திரமாக நடமாட அனுமதித்தால் 2024 அதிபர் தேர்தலை இலக்காகக் கொண்டு இன்னொரு குழப்பத்தை உருவாக்கலாம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
தாக்குதல்
அதேவேளை, 2019ல் நடந்த தற்கொலைத் தாக்குதல்களுக்கு தலைமை தாங்கிய சஹ்ரான் ஒரு தீவிரவாதி என்பது உண்மைதான், அதிபர்த் தேர்தலுக்கு முன்னர் ஒரு குறிப்பிட்ட குழுவினர் அவரையும் அவரது குழுவையும் தாக்குதல்களையும் விரைவுபடுத்தியதுதான் பிரச்சினை என்றார்.

அத்தோடு, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் நாடாளுமன்றத்தில் 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல்களை மேற்கொண்டதாக தெரிவித்த கருத்துக்கள் தொடர்பிலும் அவர் கூறினார்.