வெளியே செல்லும் மக்கள் மீண்டும் வீடு திரும்புவார்களா..! கடும் அச்சத்தில் முன்னாள் எம்.பி
K W Shantha Bandara
Sri Lankan Peoples
Sri Lanka Podujana Peramuna
NPP Government
By Sumithiran
பயங்கரவாதத்தின் தோல்விக்குப் பிறகு, இலங்கை வரலாற்றில் மக்கள் இவ்வளவு பயத்திலும் பாதுகாப்பின்மையிலும் வாழ்ந்த ஒரு சகாப்தம் இருந்ததில்லை என்று சிறிலங்கா பொதுஜன பெரமுன முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் கீழ், அன்றாட நடவடிக்கைகளுக்காக வெளியே செல்லும் மக்கள் பாதுகாப்பாக தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முடியுமா என்பதில் கடுமையான சந்தேகம் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.
மக்கள் பிரதிநிதிகளின் உயிரும் அச்சுறுத்தலில்
இன்று (28) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், பொதுமக்கள் மட்டுமல்ல, மக்கள் பிரதிநிதிகளின் உயிரும் தற்போது கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என்றும் கூறினார்.

இந்த சூழ்நிலையால், நாட்டின் எதிர்காலம் மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்து கடுமையான நிச்சயமற்ற தன்மை மற்றும் உறுதியற்ற தன்மை எழுந்துள்ளதாக சாந்த பண்டார வலியுறுத்தினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 4 நாட்கள் முன்