முதலமைச்சர் விஜய் நெற்றியில் உள்ள கறுப்பு பொட்டு - சமூக வலைத்தளங்களில் வைரல்
விஜய்யின் புதிய தோற்றமும் “அரகஜா” திலகமும் பொதுமக்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
விஜய் அணியும் திலகம், புனுகு, ஜவ்வாது, பச்சை கற்பூரம், வெட்டிவேர் உள்ளிட்ட வாசனைத் திரவியங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் “அரகஜா” திலகம் என தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
விஜய்க்கு ஜோதிடம் மீது நம்பிக்கை உள்ளது. விஜய் அரசியலில் அதிக சென்டிமென்ட்களை கடைபிடித்து வருகிறார்.
அரகஜா திலகம்
அவரின் ஆஸ்தான ஜோதிடர் ராதன் பண்டிடரை, முதலமைச்சர் விஜய்யின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அது சர்ச்சையான பிறகு அந்த அறிவிப்பை ரத்து செய்துள்ளனர்.

விஜய் கருப்பு நிற பொட்டு வைப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அதை அரகஜா திலகம் என்பார்கள்.
கோயில்களில் அபிஷேகப் பொருளாக பயன்படுத்தப்படும் “அரகஜா” திலகம், கண் திருஷ்டி மற்றும் எதிர்மறை ஆற்றல்களின் தாக்கத்தை குறைக்கும் என்ற நம்பிக்கை பலரிடமும் நிலவி வருகிறது.
ஜோதிடம் மற்றும் ஆன்மிகத்தை நம்பும் பெரிய மனிதர்கள் தங்களின் வெற்றிக்காக அரகஜாவை பயன்படுத்துவார்கள்.
பயங்கர சக்தி
தெய்வீக மூலிகைகள் மூலம் தயாரிக்கப்படும் அரகஜாவுக்கு பயங்கர சக்தி இருப்பதாக பலர் நம்புகிறார்கள்.

கோயில்களில் அபிஷேகப் பொருளாக பயன்படுத்தப்படும் “அரகஜா” திலகம், கண் திருஷ்டி மற்றும் எதிர்மறை ஆற்றல்களின் தாக்கத்தை குறைக்கும் என்ற நம்பிக்கை பலரிடமும் நிலவி வருகிறது.
அந்தவகையில் விஜய் ஜோதிடம் ஆன்மிகம் ஆகியவற்றில் மிகுந்த நம்பிக்கை உள்ளவர் என்பதால் அவரும் “அரகஜா” திலகம் இடும் வழக்கத்தை பின்பற்றுகிறார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |