நாமலுக்காக முந்திக்கொண்டு வந்த அர்ச்சுனா! பைத்தியம் என பதில் வழங்கிய மகிந்த ஜெயசிங்கவால் சபையில் வாக்குவாதம்
நாடாளுமன்றில் இன்றைய பிரேரணை உரையில் தனது விவாதத்தை ஆரம்பித்த பிரதி அமைச்சர் மகிந்த ஜெயசிங்கவுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனவுக்கும் சிறு வாக்குவாதம் இடம்பெற்றது.
மகிந்த ஜெயசிங்க உரையாற்ற ஆரம்பித்த சந்தர்ப்பத்தில் அவர், மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குறித்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
''நாடாளுமன்றிற்கு வருவார், அவரது சந்தர்ப்பத்தில் உரையாற்றுவார், போலியான கதைகளை கூறுவார், பதில் கூறவரும்போது எழுந்து ஓடிவிடுவார்.இதனையே நாமல் தொடர்ந்து முன்னெடுக்கின்றார்" என மகிந்த ஜெயசிங்க தனது கருத்தை வெளிப்படுத்தினர்.
மகிந்த ஜெயசிங்க பதில்
இந்த சந்தர்ப்பத்தில் குறுக்கிட்டு அர்ச்சுனா கருத்துக்களை தெரிவிக்க அதற்கு மகிந்த ஜெயசிங்க பின்வருமாறு பதில் வழங்கினார்.

''நீங்கள் கதைக்காதீர்கள். நாமலின் நண்பர் அல்லவா நீங்கள். உங்களுக்கு பைத்தியம் இல்லை. நீங்கள் நல்ல வைத்தியர்தான்.
உங்கள் பெயரை நான் ஏன் சொல்ல வேண்டும். விமர்சிப்பவர்கள் பெயரை நேரடியாக குறிப்பிடுவேன். எனக்கு முதுகெலும்பு உள்ளது. நாமலுக்காக பதில் சொல்ல உண்மையில் நீங்கள் யார்?
உங்களுக்கு பைத்தியம் இல்லை நீங்கள் ஒரு நல்ல வைத்தியர்தான். நீங்கள் முதலில் அமைதியாக இருங்கள்" என கூறினார்.
இந்நிலையில் மீண்டும் ஒழுங்கு பிரச்சினை குறித்து அர்ச்சுனா கேள்வி எழுப்பிய நிலையில், மகிந்த ஜெயசிங்க காரசாரமாக பதில் வழங்கியிருந்தார்.
''அவரை முதலில் அமர செய்யுங்கள். அரசாங்கத்தின் நேரத்தையே கதைப்பதற்க்காக பெற்றுக்கொண்டேன். யார் இவர்? இவருக்கு பைத்தியம். அவரை அமர செய்யுங்கள். என்றார்.
இதற்கு பதில் வழங்கிய சபாநாயகர், நிலையியல் கட்டளை என்னை குறிப்பிட்டு கருத்துக்களை முன்வைக்க மகிந்த ஜெயசிங்கவுக்கு தெரியப்படுத்தியிருந்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |