மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு!
மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் காவல்துறை இணைந்து பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் இன்று (07.08.2026) ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இராணுவ மோட்டார் சைக்கிள் பிரிவு சிறைச்சாலை பகுதியை சுற்றி கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
தற்போது நாட்டில் உள்ள பல்வேறு சிறைச்சாலைகளில் கைதிகளுக்கிடையே ஏற்பட்டு வரும் மோதல் நிலை காரணமாக மட்டக்களப்பிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மட்டக்களப்பு சிறைச்சாலையில் பரபரப்பு
இதனுடன் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்டட சிறை உடைப்பையடுத்து அங்கிருந்து 60 கைதிகள் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்டு அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனால் அங்கு பாதுகாப்பை பலப்படுத்துவதன் நோக்கமாக சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினரை நிறுத்தப்பட்டதுடன் விசேட அதிரடிப்படையினர் காவல்துறை இணைந்து பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது குறித்த சிறைச்சாலையில் நீர் கொழும்பில் இருந்து கொண்டுவரப்பட்ட 60 கைதிகளில் 42 பேர் உள்ளதுடன் இன்று மொத்தம் 980 பேர் சிறையில் உள்ளதாகவும் அவர்கள் பாதுகாப்பாக உள்ளதாக சிறைச்சாலை அதியட்சகர் தெரிவித்தார்.
மேலும் மாவட்ட சிரேஷ்ட காவல் அத்தியட்சகர் லலித் லீலாரெத்தின சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்டு அங்கு பாதுகாப்பு நடவடிக்கையை ஆராய்ந்தார்.


| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |