போதைப்பொருட்களுடன் முன்னாள் இராணுவ சிப்பாய் கைது
மஹியங்கனை (Mahiyangana) பெரகும்புர மாவத்தையில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் முன்னாள் இராணுவ சிப்பாயொருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் நபர் ஒருவரினால் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக மஹியங்கனை காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது கைது செய்யப்பட்டவர் மஹியங்கனை பகுதியை சேர்ந்த 31 வயதுடைய முன்னாள் இராணுவ சிப்பாய் ஆவார்.
காவல்துறையினர் விசாரணை
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை சோதனைக்கு உட்படுத்திய போது அவரிடம் இருந்து 3120 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் 625 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த சந்தேக நபர் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருக்கலாம் என காவலல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை பெற்று சந்தேக நபரை காவல்துறை காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொள்ள உள்ளதாக மஹியங்கனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.... |
ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 2 நாட்கள் முன்