மறக்க முடியாத பரிசை கொடுத்த டோனி நெகிழ்ச்சியில் அஸ்வின்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவருமான எம்.எஸ்.டோனி(ms dhoni) தனக்கு மறக்க முடியாத பரிசை கொடுத்துள்ளதாக இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின்(ashwin) தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்து எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று(16) நடைபெற்றது. இதில் இந்திய இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களாக அஷ்வின், ஸ்ரீகாந்த் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய அஷ்வின், மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,
மறக்க முடியாத பரிசு
"என்னுடைய 100வது டெஸ்ட் போட்டிக்கு நினைவு பரிசு வழங்க டோனியை அழைத்தேன், அவரால் வரமுடியவில்லை. ஆனால், மீண்டும் என்னை சிஎஸ்கேவுக்கு அழைத்து மறக்க முடியாத பரிசை அவர் கொடுத்து விட்டார்" என்று நெகிழ்ச்சியாக தெரிவித்தார்.
அஸ்வினை மெருகேற்றிய டோனி
முன்னதாக பேசிய ஸ்ரீகாந்த், "வெங்கட்ராமனுக்குப் பிறகு தமிழகத்திலிருந்து இந்தியாவுக்காக உச்சம் தொட்ட ஸ்பின்னர் அஷ்வின்தான். அஷ்வினை டோனி நன்றாகப் பயன்படுத்தி மெருகேற்றினார். பஞ்சாப், ராஜஸ்தான் என ஒரு வலம் அடித்துவிட்டு அஷ்வின் மீண்டும் சென்னைக்கு வந்திருக்கிறார்" என்று தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்