ஆசிய கோப்பை 2025: சூப்பர் 4 சுற்றுக்கான இறுதி அட்டவணை
ஐ.சி.சி டி20 ஆசியக் கோப்பையின் 2025 ஆம் ஆண்டுக்கான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சூப்பர் 4 கட்டத்திற்கான போட்டி அட்டவணைகள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
இது ஆசியாவின் கிரிக்கெட் ஜாம்பவான்களிடையே அதிக பலப்பரிட்சையை உறுவாக்கும் சமீபத்திய களமாக மாறியுள்ளது.
குழு போட்டிகளில் இன்னும் ஒரு ஆட்டம் மட்டுமே மீதமுள்ள நிலையில், சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும் நான்கு அணிகளும் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளன.
இலங்கை அணி
குழு A இலிருந்து, இந்தியா (A1) மற்றும் பாகிஸ்தான் (A2) தங்கள் இடங்களை உறுதி செய்துள்ளன.
அதே நேரத்தில் இலங்கை (B1) மற்றும் பங்களாதேஷ் (B2) குழு B இலிருந்து முன்னேறியுள்ளன.
இதன்படி குழுநிலை போட்டிகளில் தோல்வியடையாமல் சிறப்பாக செயல்பட்ட இலங்கை அணி, எதிர்வரும் செப்டம்பர் 20 ஆம் திகதி துபாயில் பங்களாதேசிற்கு எதிராக சூப்பர் 4 சுற்றில் களமிறங்கவுள்ளது.
துனித் வெல்லாலகே
பின்னர் இலங்கை அணி செப்டம்பர் 23 ஆம் திகதி பாகிஸ்தானையும் , செப்டம்பர் 26 ஆம் திகதி இந்தியாவையும் எதிர்கொள்ளவுள்ளது.
இந்நிலையில் ஆசியக் கோப்பையின் 2025 ஆம் ஆண்டுக்கான இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான பரபரப்பான போட்டிகள் அடுத்த நாட்களில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று இடம்பெற்ற தகுதிகான் சுற்றில் இலங்கை அணி ஆப்கானிஸ்தானை வெற்றிக்கொண்டது. எனினும் இந்த போட்டியில் விளையாடிய இலங்கையின் இளம் வீரர் துனித் வெல்லாலகேயின் தந்தை மாரடைப்பில் மரணித்தமை, வெற்றியையும் தாண்டி இலங்கை வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் இறுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

