நௌஃபர் ஜேசுதாசனின் 7 கோடி ரூபாய் சட்டவிரோத சொத்துக்கள் முடக்கம்!
நௌஃபர் ஜேசுதாசன் என்ற போதைப்பொருள் கடத்தல்காரருக்கு சொந்தமானது எனக் கூறப்படும், 7 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களின் பயன்பாட்டை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு நடத்திய விசாரணையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, மாத்தளை மீகஸ்தென்ன மற்றும் ஓவிலிகந்த பகுதிகளில் அமைந்துள்ள பல சொத்துக்கள் இவ்வாறு தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ளன.
தொடர் விசாரணை
இடைநிறுத்தப்பட்ட சொத்துக்களில் 18 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 10 பேர்ச் நிலம், 4.14 கோடி ரூபாய் மதிப்புள்ள மூன்று மாடி வீடு அடங்கிய 10 பேர்ச் நிலம், 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள 4 ஏக்கர் தேயிலைத் தோட்டம் மற்றும் 16 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 12.5 பேர்ச் நிலம் ஆகியவை அடங்குவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சமீபத்தில் காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இச்சந்தேக நபருக்குச் சொந்தமான மேலும் பல சொத்துக்கள் குறித்தும் தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
பருத்தித்துறையில் இராணுவ முகாம்களுக்கு எதிராக வெடிக்கவுள்ள பாரிய பேராட்டம்! விடுக்கப்பட்டுள்ள அழைப்பு
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |