அஸ்வெசும கொடுப்பனவு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு
இலங்கையில் எதிர்வரும் காலங்களில் அஸ்வெசும நலத்திட்டத்தின் மூலமான உதவித்தொகை, ஏழை மற்றும் மிகுந்த வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட அஸ்வெசும நலத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் இந்த ஆண்டு முதல் செயற்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் இதற்கான தரவுகளை புதுப்பிக்கும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் உதவி ஆணையாளர் அஷான் தர்ஷக குறிப்பிட்டுள்ளார்.
வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்கள்
2023 ஆம் ஆண்டில், 4 பிரிவுகளின் கீழ் சுமார் 16 இலட்சம் மக்கள் குறித்த உதவித்தொகையை பெற்றதுடன் ஏப்ரல் 2025 இல், நான்காவது பிரிவான இடைக்காலப் பிரிவில் இருந்த 315,000 பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டன.

இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல், மூன்றாவது பிரிவான நலிவடைந்த மக்களில் 425,000 பயனாளிகளுக்கான நிவாரண உதவித்தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த 2 பிரிவுகளில் உள்ள ஏழை மற்றும் மிகுந்த வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு மீண்டும் அஸ்வெசும நலத்திட்டத்தின் மூலமான உதவித்தொகையை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திறைசேரியின் மில்லியன் டொலர் மோசடி...! பின்னணியில் அரசாங்க ஆதரவாளர் - சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
4 நாட்கள் முன்