அஸ்வெசும முதல் கொடுப்பனவு பணம் எப்போது! வெளிவந்த அறிவிப்பு
அஸ்வெசும பயனாளிகளுக்கான முதலாவது தவணைக் கொடுப்பனவானது, ஓகஸ்ட் 9 முதல்15 ஆம் திகதிக்கு இடையில் வழங்கப்படவுள்ளதாக சமூக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
பயனாளர் பிரிவிற்கேற்ப, மாதாந்தம் 15000/-,8500/-,5000/-, 2500/- என கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
மற்றொரு பயனாளர் குழு

அத்துடன் மேன்முறையீடுகள், ஆட்சேபனைகளை பரிசீலிக்கப்பட்ட பின், மற்றொரு பயனாளர் குழுவொன்றும் இத்திட்டத்தில் இணைக்கப்படும் என்று சமூக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
அஸ்வெசும பயனாளர்களுக்கான வங்கி கணக்குகளைத் திறக்கும் செயற்பாடு 95% வீதம் நிறைவடைந்துள்ளது.
அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ், இருபது இலட்சம் பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் கொடுப்பனவுகள் வைப்பிடலிடப்படவுள்ளன.
சமுர்த்தி உதவித்தொகை

தற்போது சமுர்த்தி உதவித்தொகை பெறும் 1,280,000 குடும்பங்கள் நலன்புரி உதவிகளுக்காக விண்ணப்பித்துள்ளதாகவும், அதில் 887,653 குடும்பங்கள் தகுதி பெற்றுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை அறிந்து கொள்ள பெயர் பட்டியல் என்பதை கிளிக் செய்து உங்கள் கிராம சேவகர் பிரிவு கொடுப்பதன் மூலம் பார்வையிட முடியும்.
| அஸ்வெசும பயனாளிகளுக்கான பெயர் பட்டியல் |
YOU MAY LIKE THIS