ஆளும் கட்சியின் கோழைத்தனமான செயல்! ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகம் தாக்கப்பட்டமை தொடர்பில் வெளியான கண்டன அறிக்கை

Colombo Attack SJB Ranjith Madduma Bandara Kotte Opposition Leader Office
By Chanakyan Mar 07, 2022 12:05 PM GMT
Report

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்திற்கு திட்டமிடப்பட்ட ஒரு குண்டர்கள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட இழிவான செயலானது நாட்டின் ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்ட கடுமையான எச்சரிக்கை என கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார (Ranjith Madduma Bandara) தெரிவித்துள்ளார். 

ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்திற்கு முன்பாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையில் வந்த ஆதவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் முட்டை வீசி தாக்குதலையும் மேற்கொண்டுள்ளனர்.

இதனைக் கண்டித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் அந்த அறிக்கையில், 

நாட்டு மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கத் தவறியதால் மக்கள் மத்தியில் அதிருப்திக்குள்ளாகியுள்ள அரசாங்கம், மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான எதிர்க்கட்சியின் தலைமையகம் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலில் மக்களின் கருத்தை நசுக்குவது வருந்தத்தக்க தவறு என்பதை அரசாங்கத்திற்குச் சொல்கிறோம்.

எரிபொருள் நெருக்கடி, எரிவாயு நெருக்கடி, மருந்து தட்டுப்பாடு, அத்தியாவசிய உணவு மற்றும் பானங்களுக்கான பற்றாக்குறை, விலை உயர்வு, போக்குவரத்து சேவை செயலிழப்பினால் நாட்டில் அரசாங்கம் ஒன்று இல்லாத அராஜக ஆட்சி உருவாகும் இந்நேரத்தில், இத்தகைய கேவலமான செயல்களில் இருந்து அவர்களின் இயலாமையை மறைக்கை முயல்வது தீக்கோழியின் தலையை மணலில் மறைப்பது போன்ற செயலாகும்.

அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் அபிப்பிராயத்திற்கு அரசாங்கம் அடக்குமுறையையே தீர்வாகத் தேர்ந்தெடுத்திருந்தால், அதற்கெதிராக மக்களுடன் இணைந்து செயற்பட ஐக்கிய மக்கள் சக்தி ஒரு போதும் தயங்காது என்பதை இங்கு சுட்டிக்காட்டுகிறோம்.

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகம் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டர்கள் தாக்குதல் தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி இதற்குக் காரணமானவர்கள், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று காவல்துறை உட்பட பொறுப்பு வாய்ந்த தரப்பினரிடம் வலியுறுத்தி கூறிக் கொள்கிறோம்.

ஒரே நாடு ஒரே சட்டத்தை யதார்த்தமாக நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் முன் நிற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இதுபோன்ற கோழைத்தனமான செயல்களால் ஐக்கிய மக்கள் சக்தியின் மக்கள் சார்ந்த வேலைத்திட்டங்களை நிறுத்த முடியாது என்பதை குண்டர்கள் குழுக்களுக்கு நாங்கள் கூறிக்கொள்கிறோம்.

இன்று மக்களை வாட்டி வதைக்கும் பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடம் பதில் இல்லை என்பதையே இவ்வாறான சம்பவங்களில் இருந்து தெளிவாகின்றது.

மக்கள் மீதான அடக்குமுறை, ஊடக அடக்குமுறை, சமூக ஊடக அடக்குமுறை, தொழிற்சங்கங்கள் மீதான அடக்குமுறை, ஆர்ப்பாட்டங்களை முடக்குவதற்கான அடக்குமுறைகளிலிருந்து ஜனநாயக அரசியல் கட்சிகளின் அடக்குமுறைக்கு அரசாங்கம் தமது இலக்குகளை மாற்றுவதன் ஊடாக வரப்போகும் ஆபத்திற்கு எதிராக மக்களைத் ஒன்று திரட்டும் போராட்டம் மிக வேகமாக முன்னெடுக்கப்படும் என்பதை வலியுறுத்தி கூறிக் கொள்கிறோம்.

இதற்காக அனைத்து மக்கள் சார்ந்த அமைப்புகளையும் எம்முடன் இனைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறோம் என அவர் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada

16 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு, வவுனிக்குளம்

19 May, 2014
மரண அறிவித்தல்

கரவெட்டி, திருகோணமலை, கல்முனை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கொழும்பு

15 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், கொழும்பு, மெல்போன், Australia

18 May, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஒட்டுசுட்டான், Oshawa, Canada

17 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Dortmund, Germany

14 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கோப்பாய் வடக்கு, கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை, London, United Kingdom

11 Jun, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Brampton, Canada

22 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, யாழ்ப்பாணம், London, United Kingdom

18 May, 2022
மரண அறிவித்தல்

கந்தர்மடம், யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம், சென்னை, India

10 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாவிட்டபுரம், மட்டுவில், கொழும்பு, Stouffville, Canada

17 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி மேற்கு

15 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கைதடி கிழக்கு

20 Apr, 2024
மரண அறிவித்தல்

ஊரெழு, கோப்பாய், கொழும்பு

16 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

16 May, 2014
மரண அறிவித்தல்

Aalen, Germany, Schwäbisch Gmünd, Germany

15 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கல்வியங்காடு, யாழ்ப்பாணம்

17 May, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, ஸ்ருற்காற், Germany

01 Jun, 2020
மரண அறிவித்தல்

சிறுக்கண்டல், பரிஸ், France

05 May, 2024
மரண அறிவித்தல்

யாழ் அளவெட்டி கிழக்கு, Jaffna, Louvres, France

14 May, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

09 May, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Witten, Germany

14 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

09 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சூராவத்தை

15 May, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Paris, France

14 May, 2023
22ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பலெர்மோ, Italy

15 May, 2022
மரண அறிவித்தல்

Kuala Lipis, Malaysia, காரைநகர், பம்பலப்பிட்டி, Ilford, United Kingdom

11 May, 2024