முன்னாள் இராணுவ அதிகாரி தாக்குதல்! வெளிநாட்டுத் தூதரக அதிகாரிக்கு எதிராக முறைப்பாடு
கொழும்பு அல்தாயர் அடுக்குமாடி குடியிருப்பில் இலங்கை முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக வெளிநாட்டுத் தூதரக அதிகாரி ஒருவர் மீது காவல் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தின் சிசிரிவி காட்சிகளில், வரவேற்பறையில் அமர்ந்திருந்த முன்னாள் இராணுவ அதிகாரியிடம் தூதரக அதிகாரி வந்து வாக்குவாதத்தில் ஈடுபடுவது பதிவாகியுள்ளது.
ராஜதந்திரப் பாதுகாப்பு
அதன்போது, சம்பந்தப்பட்ட தூதரக அதிகாரி முன்னாள் இராணுவ அதிகாரியை எச்சில் உமிழ்ந்து, உடல்ரீதியாகத் தாக்கியதும் அக்காணொளியில் தெரியவந்துள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில், சம்பந்தப்பட்ட தூதரக அதிகாரிக்கு ராஜதந்திரப் பாதுகாப்பு இருப்பதாக கூறப்படுவதால் குறித்த முறைப்பாட்டை அதிகாரிகள் எவ்வாறு கையாள்வார்கள் என்ற கேள்விகள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |