எம்பியை சந்தித்து விட்டு திரும்பிய பிரதேச சபைத் தலைவர் மீது சரமாரி தாக்குதல்
கற்பிட்டி (Kalpitiya) பிரதேச சபைத் தலைவரின் மீது இனந்தெரியாத கும்பலினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து கற்பிட்டி பிரதேச சபைக்கு இந்த முறை தேர்ந்தெடுக்கப்பட்ட அப்துல் சத்தார் முகமது ரிக்காஸ் என்பவரின் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (16) மதுரங்குளிய விருதோடை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சரமாரி தாக்குதல்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பிரதேச சபைத் தலைவர் மற்றும் சிலர் தேசிய மக்கள் சக்தி கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முகமது பைசலின் (Muhammad Faisal) வீட்டிற்கு சென்று திரும்பும் போதே சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தநிலையில், விருதோடை வழியாக நுரைச்சோலைக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, அங்கிருந்த வீட்டிற்கு அருகில் வைத்து அவர் தாக்கப்பட்டுள்ளார்.
சிறப்புப் படையினர்
இதையடுத்து, சம்பவம் தொடர்பில் அவர் காவல்துறையினருக்கு தெரிவித்து தனது முறைப்பாட்டை அளித்துள்ளார்.
பின்பு, குறித்த பகுதியைப் பாதுகாக்க காவல்துறையினர் மற்றும் சிறப்புப் படையினர் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
