ஆங் சான் சூகிக்கு மேலும் 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை
மியான்மர் முன்னாள் அரச ஆலோசகர் ஆங் சான் சூகிக்கு மேலும் 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி கடந்த 2020ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்தது. அந்த ஆட்சியில் அரசின் ஆலோசகராக ஆங் சான் சூகி பொறுப்பு வகித்தார்.
ஆட்சிக் கவிழ்ப்பு
எனினும், தேர்தலில் மோசடி இடம்பெற்றதாக் கூறி கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் ஆட்சியைக் கவிழ்க்கப்பட்டு இராணுவம் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றியது. இதன் பின் ஆங் சான் சூகி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
இராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியைத் தூண்டியமை, கொரோனா விதிகளை மீறியமை, அரச ரீதியான சட்டங்களை மீறியமை, ஊழலில் ஈடுபட்டமை என ஆங் சான் சூகி மீது 11 வழக்குகள் தொடரப்பட்டன.
இதுதொடர்பான விசாரணைகள் மியான்மர் நீதிமன்றத்தில் நடந்து வந்தன. இராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியை தூண்டியமை, கொரோனா விதிகளை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளில் ஆங் சான் சூகிக்கு கடந்த டிசம்பர் மாதம் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஊழல் வழக்குகள் மீது விசாரணை
தொடர்ந்தும் ஆங் சான் சூகிக்கு எதிரான சில ஊழல் வழக்குகள் மீது விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதன்படி ஆங் சான் சூகிக்கு மேலும் 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நீதித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
இராணுவத்தினால் சிறைப்பிடிக்கப்பட்ட ஆங் சான் சூகி! பொரிஸ் ஜோன்சன் சீற்றம்
மியன்மாரில் வெடித்த இராணுவப் புரட்சி! சிறைப்பிடிக்கப்பட்ட ஆங் சான் சூகி - ஸ்ரீலங்காவிற்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை
இராணுவத்தின் பிடிக்குள் மியன்மார் - எங்கே ஆங் சான் சூகி?