அவுஸ்திரேலிய அணிக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க வாழ்த்து!
உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணியினர் வெற்றி பெற்றமைக்காக அதிபர் ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்று (19)அஹமதாபாத் - நரேந்திர மோடி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

வட்டுக்கோட்டையில் பதற்ற சூழ்நிலை: காவல் நிலையத்திற்கு முன் குவிக்கப்பட்ட அதிரடிப் படையினர் (படங்கள்)
இந்திய அணி
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 240 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
அணி சார்பில் அதிகபடியாக, கே.எல். ராகுல் 66 ஓட்டங்களையும், விராட் கோலி 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
விராட் கோலி ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளி தனது 72ஆவது அரைச் சதத்தை பதிவு செய்தார்.
பந்து வீச்சில், அவுஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டார்க் 55 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
வெற்றி இலக்கு
இதற்கமைய, 241 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலிய அணி 43 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி பெற்றது.
அணி சார்பில் அதிகபடியாக, டிராவிஸ் ஹெட் 137 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். பந்து வீச்சில் இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.
1987, 1999, 2003, 2007 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் அவுஸ்திரேலியஅணி உலகக் கிண்ணத்தை வென்றுள்ளது.
6 ஆவது முறையாக
இந்த வெற்றியுடன் அவுஸ்திரேலிய அணி 6 ஆவது முறையாகவும் உலகக் கிண்ணத்தை வென்றுள்ளது.
வெற்றிப்பெற்ற அவுஸ்திரேலிய அணிக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்துக்களைக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
