ஈரானை தாக்கிய B-2 விமானங்கள் : சரணடையும்படி மிரட்டிய ட்ரம்ப்
ட்ரம்பின் (Donald Trump) மிரட்லுக்கு ஈரான் (Iran) ஒருபோதும் அடிப்பணியமாட்டாது என்பதை, அமெரிக்காவின் தாக்குதல் இடம்பெற்ற சில மணி நேரங்களில் ஈரானின் பதில் நடவடிக்கைகள் வெளிப்படுத்தி நிற்கின்றன.
குறிப்பாக, ஈரான் மீது அமெரிக்கத் தாக்குதல் இடம்பெற்ற சில மணி நேரத்தில், தனது சக்திவாய்ந்த Kheybar-Shekan என்ற ஏவுகணைகளைக்கொண்டு இஸ்ரேல் மீது கடுமையான தாக்குதல்களை நடாத்தியிருந்தது ஈரான்.
இஸ்ரேலின் சர்வதேச விமானநிலையமான பென்கூரியன் விமான நிலையம் மீது தாம் தாக்குதல் நடாத்தியதாக ஈரான் அறிவித்திருந்தது.
ஈரானின் 10 ஏவுகணைகள் இஸ்ரேலின் டெல் அவிவ், ஜெருசலேம் உட்பட பல இடங்களிலும் விழுந்து வெடித்து கடுமையான சேத்ததை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு எதிராக அனைத்து வழிகளிலும் ஈரான் தொடர்ந்து போராடும் என்று ஈரானின் வெளிவிவகார அமைச்சர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், அமெரிக்கா சர்வதேச விதிமுறைகளையெல்லாம் மீறி ஈரான் மீது தாக்குதலை ஆரம்பித்துள்ளது என்றும் அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.
ஒரு வேளை அமெரிக்க இலக்குகளை ஈரான் தாக்குவதற்கு முற்படுமேயானால், எந்தெந்த வடிவங்களில் அமெரிக்கா மீது ஈரான் பதில்தாக்குதலை நடாத்தலாம் என்று ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
