மூன்றாம் உலகப் போர் மூளும்....! பாபா வாங்கா அதிர்ச்சி கணிப்பு
பாபா வங்காவின் (Baba Vanga) 2026 ஆம் ஆண்டில் உலகப் போர் 3 தொடங்குவதற்கான அபாயகரமான சூழ்நிலை உருவாகுமென்ற கணிப்பு தற்போது வைரலாகி வருகின்றது.
உலகின் சக்திவாய்ந்த நாடுகளுக்கு இடையே பதற்றம் மிக அதிகமாகுமெனவும் குறிப்பாக, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா-தைவான் போன்ற நாடுகளுக்கு இடையேயான மோதல்கள் உச்சத்தை எட்டுமெனவும் பாபா வங்கா எச்சரித்துள்ளார்.
அடுத்த ஆண்டான 2026 இல் என்னென்ன ஆபத்துகள் பூமியில் ஏற்படலாம் என்று பாபா வங்கா ஏற்கனவே கணித்துள்ள விடயங்களை அவரை ஆய்வு செய்பவர்கள் வெளியிட்டுள்ளனர்.
மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறும்
பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்கா, 12 வயதில் பார்வையை இழந்தார். அவருக்கு பார்வை பறிபோன பின்னர், எதிர்காலத்தை கணிக்கும் சக்தி கிடைத்ததாக கூறப்படுகிறது.
அவர் இறப்பதற்கு முன்பு, ஆண்டுதோறும் உலகில் நடக்கும் நிகழ்வுகளை முன்னரே கணித்துள்ளார். பின்னர் அவற்றை குறிப்புகளில் எழுதினார். பார்வையற்ற தீர்க்கதரிசியான பாபா வாங்கா கணித்த பல உலக நிகழ்வுகள் உண்மையாகி உள்ளன.
அந்த வகையில் AI ஆனது மனிதர்களின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும், குறிப்பாக வேலைவாய்ப்புகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், இது மனித இனத்திற்கு ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
உலகப் போர்
2026 ஆம் ஆண்டில் உலகப் போர் 3 தொடங்குவதற்கான அபாயகரமான சூழ்நிலை உருவாகுமென்றும் உலகின் சக்திவாய்ந்த நாடுகளுக்கு இடையே பதற்றம் மிக அதிகமாகுமெனவும் குறிப்பாக, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா-தைவான் போன்ற நாடுகளுக்கு இடையேயான மோதல்கள் உச்சத்தை எட்டுமெனவும் எச்சரித்துள்ளார்.

இந்தப் போரில் மேற்கு நாடுகள் அழிவைச் சந்திக்க நேரிடும் என்றும், கிழக்கு நாடுகள் ஆதிக்கம் செலுத்தும் நிலை உருவாகும் என்றும் அவர் கணித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |