றீச்சாவில் நடந்த அசம்பாவிதம் : அரசியல் பிரவேசம் குறித்து மனம் திறந்த பாஸ்கரன் கந்தையா!
அரசியலுக்கு வருவதா அல்லது அரசியலில் வெற்றி பெறுவதா என்பதை தான் தீர்மானிக்கவில்லை என றீச்சா நிறுவன தலைவரும் தொழிலதிபருமான பாஸ்கரன் கந்தையா தெரிவித்துள்ளார்.
ஆனால் இவர் அரசியலுக்குள் வருகிறார் இவருடைய வெற்றி நிர்ணயிக்கப்பட்டுவிட்டது என எதிரி தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
லங்காசிறிக்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், பாஸ்கரன் கந்தையாவை அரசியலுக்குள் நுழையுமாறு அரசியல் வலிய அழைக்கின்றது. அல்லது அரசியலுக்குள் போகுமாறு இங்கிருக்கும் அரசியல்வாதிகள் விரும்புகின்றனர்.
அதனுடைய வெளிப்பாடு தான் சில தினங்களுக்கு முன்னர் றீச்சா உணவுத் திருவிழாவில் நடந்த அசம்பாவிதம் பேசுபொருளாக மாறியதும், உணவுத் திருவிழாவின் போதும் பின்னரும் நடந்தது மிகப்பெரிய அரசியலே ஆகும்.
அதனுடைய வெளிப்பாடு தான் தொடர்ச்சியான விமர்சனங்களும், காழ்ப்புணர்ச்சிகளும் ஆகும். நான் அரசியலுக்கு வரவேண்டும் என விரும்புவதும் அரசியல்வாதிகளே.
எனக்கு ஆளுமை இருக்கின்றது என்பதை எதிரி மக்களுக்கு காட்டிக்கொடுத்ததன் வெளிப்பாடு என்னை அரசியலுக்குள் தள்ளுகின்ற ஒரு போக்கை காட்டுகின்றது. ஆனால் அரசியலுக்குள் வருவதா என்பதை நான் இன்னமும் தீர்மானிக்கவில்லை.” என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |