மாநகர முதல்வரால் ஆளுநருக்கு எதிராக வழக்குத் தாக்கல்- நீதிமன்றின் உத்தரவு!
மட்டக்களப்பு மாநகர சபையின் அதிகாரங்களை ஆளுநரிடம் இருந்து மீளவும் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் பெற்றுக்கொள்ளப்பட்டமை தொடர்பான வழக்கு நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
குறித்த வழக்கு இன்றைய தினம் நடைபெற்ற போது சிரேஷ்ட சட்டத்தரணி கேசவன் சயந்தன் முன்னிலையாகி, ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் அவர் தெரியவருகையில்,
மாநகர முதல்வர் தி. சரவணபவனால் தாக்கல் செய்யப்பட்ட தடையீட்டு எழுத்தாணை கூறும் விண்ணப்ப வழக்கானது இன்றைய தினம் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது எதிர் மனுதாரர்கள் சார்பில் சில ஆட்சேபனைகள் எழுப்பப்பட்டது. அதாவது மனுதாரர்கள் சார்பில் கோரப்பட்ட மாற்று சத்திய கூற்று பிரதிகள் தங்களுக்கு கிடைக்கப் பெறவில்லை என்றும் குறித்த பிரதிகள் கிடைக்காதபடியால் உடனடியாக இந்த வழக்கை இறுதித் தீர்ப்பு கட்டளைக்கு நியமிக்குமாறு விண்ணப்பம் செய்யப்பட்டது.
அதற்கு மேலதிகமாக ஒரு எழுத்து மூல சமர்ப்பணத்தையும் திறந்த நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். விண்ணப்பம் தொடர்பில் எமது எதிர் சமர்ப்பண விண்ணப்பம் செய்திருந்தோம் இதில் மேன்முறையீட்டு நீதிமன்ற ஒழுங்கு விதிமுறைகளை சுட்டிக் காட்டி இருந்தோம்.
அந்த அடிப்படையில் அவதானித்த நீதிபதி குறித்த விடயம் தொடர்பாக மாற்றுச் சக்தி கூற்று கிடைக்காத காரணத்தினால் தமது கட்டளைக்காக எதிர்வரும் 24ஆம் திகதி வழக்கை ஒத்திவைத்துள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.