ஸ்ரீலங்கா அரச இயந்திரத்திற்கு எதிராக தமிழ் பேசும் மக்களின் உரிமைளை வென்றடுக்க பொலிகண்டிவரை அணி திரளுங்கள்!
நாட்டிலே தமிழ், முஸ்லிம் மக்கள் சிறுபான்மையினர் என்ற காரணத்திற்காக பேரினவாதத்தை மேலோங்க செய்து 73 வருடங்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள்.
இவ்வாறான நிலையில் சிறுபான்மையினராக இருக்கும் எங்களை பிரித்தாளுகின்றனர் என போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான செயற்பாடுகள் இனி நடக்கக்கூடாது. தமிழ் பேசுகின்ற மக்களாக வடக்கு கிழக்கை தாயகமாக கொண்ட தமிழ் மக்களும், வடக்கு கிழக்கு மற்றும் ஏனைய பகுதிகளில் வாழும் முஸ்லிம்களும், மலையகத்திலே வாழுகின்ற தமிழ் உறவுகளும் தமிழ் பேசும் மக்களாக நாம் அனைவரும் இணைந்து ஒன்றாய் நிற்க வேண்டும்.
அந்த வகையிலே இஸ்லாமியர்கள் செறிந்து வாழும் காத்தான்குடியில் முஸ்லிம் மக்கள் பெரும் ஆதரவை வழங்கியுள்ளனர்.
எனினும் இந்த ஆதரவு எல்லையுடன் முடிவுறாது பொலிகண்டி வரை தொடர்ந்து வரவேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பிற்கு எதிராக குரல்கொடுப்பது போன்று தமிழர்களின் அரசியல் உரிமைகள் மீறப்படுவதற்கு எதிராகவும் முஸ்லிம் சமுகத்தினர் குரல் கொடுக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.