நெதர்லாந்தில் சிறப்புற நடைபெறவுள்ள பெனு அன்னை புனித தமிழர் திருயாத்திரை
நெதர்லாந்(netherlands)து தமிழ்கத்தோலிக்க ஆன்மீகப் பணியகம் வருடா வருடம் மே மாதம் இரண்டாவது சனிக்கிழமை முன்னெடுக்கும் .மருதமடு அன்னை குடியிருக்கும் Belgium ஏழைகளின் அன்னையாம் பெனு அன்னை புனித நீரூற்றை நோக்கிய ,27 வது வருட தமிழர் திருயாத்திரை இம்முறை 10-05-2025 அன்று நடைபெறவுள்ளது .
சிறப்பு நிகழ்வுக்காக காலை சிறப்பு குணமளிக்கும் நற்கருணை ஆராதனையும் மதியம் புனித நீரூற்றை நோக்கிய சிறப்பு மெழுகுதிரி பவனியும், அதே நேரம் மருத மடு அன்னையின் சிற்றாலயத்தில் வழிபாடும், மாலை திருநாள் திருப்பலியும் சிறப்பாக நடைபெறும் .
நம்பிக்கையின் அன்னை மரியா
நம்பிக்கையின் திருப்பயணிகள் சிறப்பு யூபிலி ஆண்டில் நம்பிக்கையின் அன்னை மரியா என்ற தலைப்பில் யூபிலி ஆண்டை சிறப்பித்து விழாவை சிறப்பாக தலைமை தாங்கி வழிநடத்துபவர் திருமலை மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி போல் றொபின்கள் அடிகளார் .
நீங்கள் என்னை நம்புங்கள் நான் உங்களை நம்புவேன் “ என்று காட்சி கொடுத்த அன்னையை நம்பி “ அன்னையின் பாதம்பணிந்து ஆசி பெற அனைவரையும் அன்போடு அழைப்பதாக நெதர்லாது தமிழ்கத்தோலிக்க ஆன்மீக பணியக இயக்குனர் மற்றும் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



