சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை
இலங்கை (Srilanka) சந்தையில் கிடைக்கும் முகத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் மற்றும் லோஷன்கள் தொடர்பில் தொடர்ச்சியாக சர்ச்சைக்குரிய செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன.
அந்தவகையில், சருமத்தை வெண்மைப்படுத்தும் கிரீம் உள்ளிட்ட மேலும் பல கிரீம்கள் அவற்றின் காலாவதி திகதி மாற்றியமைக்கப்பட்டு சமூக ஊடகங்களின் வாயிலாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு காலாவதியான கிரீம் வகைகளை விற்பனை செய்து வந்த கொழும்பு (Colombo) - ராஜகிரிய பகுதியில் அமைந்துள்ள இரண்டு கடைகளை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.
காலாவதி திகதியை மாற்றி விற்பனை
இந்த விற்பனை நிலையங்கள் வெளிநாட்டில் தயாரிக்கப்படும் கிரீம் வகைகளின் காலாவதி திகதியை மாற்றி அதனை சமூக ஊடகங்கள் ஊடாக விற்பனை செய்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இரு கடைகளிலும் இருந்த அனைத்து கிரீம் வகைகளையும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாகவும், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, சந்தையில் கிடைக்கும் கிரீம்களில் ஆபத்தான அளவில் அதிக அளவு கன உலோகங்கள் இருப்பது ஆய்வக சோதனைகளில் தெரியவந்துள்ளது.
நுகர்வோர் அதிகாரசபையின் தகவலின்படி, சோதனை செய்யப்பட்ட தயாரிப்புகள் கன உலோகங்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பு வரம்புகளை மீறி நுகர்வோருக்கு கடுமையான உடல்நல அபாயங்களை ஏற்படுத்துகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
