ரஷ்யா மீது பொருளாதாரத் தடை- பிரகடனப்படுத்தினார் பைடன்
முந்தைய தங்கள் மோசமான நடவடிக்கைகளுக்காக ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கப்படுவதாக அமெரிக்க அரச தலைவர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நிருபர்கள் சந்திப்பில் பேசிய அவர்,
“ ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள், மேற்கத்திய நிதியுதவி பெறுவதில் இருந்து அவர்கள் துண்டிக்கப்படுவார்கள். ரஷ்யாவின் உயரதிகாரிகள் மீதும் பொருளாதார தடைகளை விதிப்போம்.
வி.இ.பி (VEB) மற்றும் ரஷ்யாவின் இராணுவ வங்கி ஆகிய இரண்டு பெரிய நிதி நிறுவனங்களின் மீது நாங்கள் தடைகளை அமுல்படுத்துகிறோம்.
விளாடிமிர் புடின் பல பிரதேசங்களை வலுக்கட்டாயமாக ஆக்கிரமிப்பதற்கான ஒரு காரணத்தை உருவாக்குகிறார், என் பார்வையில்... அவர் தாக்குதல் நடத்த மேலும் ஒரு காரணத்தை அமைத்துக் கொண்டிருக்கிறார்.
இது உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் ஆரம்பம். புடின் தனது அண்டை நாடுகளுக்கு சொந்தமான பிரதேசத்தில் புதிய 'நாடுகளை' அறிவிக்கும் உரிமையை இறைவனின் பெயரில் யார் அவருக்கு தருகிறார் என்று நினைக்கிறார்? என்று அமெரிக்க அரச தலைவர் ஜோ பைடன் கேள்வி எழுப்பினார்.
