இசை நிகழ்ச்சியில் பயங்கரம் : கொடூரமாக கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட இளைஞர்
களுத்துறை (Kalutara) கமகொட பிரதேசத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றில் இளைஞர் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், தொடங்கொட ஜன் உதான கிராமத்தைச் சேர்ந்த 20 வயதுடைய மெனுர நிம்தர வணிகசேகர என்ற இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தனது உள்ளூரில் உள்ள பெண்ணொருவரை திருமணம் செய்துள்ளார்.
இளைஞர் கொலை
அந்த பெண் சந்தேக நபரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்த நிலையில் தான் பணிபுரிந்த ஆடை தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த இளைஞருடன் இசை நிகழ்ச்சியில் நடனம் ஆடியுள்ளார்.
இந்தநிலையில் இதனை கவனித்த குறித்த சந்தேக நபர், நடனமாடிக் கொண்டிருந்த இளைஞனின் கழுத்தை அறுத்து கொன்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொன்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….](https://cdn.ibcstack.com/article/528b1858-c217-44bd-aa75-8d6f4258fc70/24-666c04ec6747a-sm.webp)
இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….
1 வாரம் முன்![கல்வி ஆயுதம் தான் தமிழினத்தை மீள் எழுச்சி கொள்ளச் செய்யும்…](https://cdn.ibcstack.com/article/be32300b-7292-4007-95f8-41795e7a8c3f/24-6662705be1451-sm.webp)