வட மாகாணத்துக்கு பிச்சை இல்லை: ஜனாதிபதி அநுரவின் பாதீட்டில் பாரபட்சமா!
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை விரிவுபடுத்தவும் 1,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையின் போதே ஜனாதிபதி இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு - கிழக்கு மாகாணங்களில் போர் காரணமாக வீடும் அற்ற குடும்பங்களுக்காக 2,500 வீடுகளை நிர்மாணிப்பதற்கு தற்போது ஒதுக்கப்பட்டுள்ள ரூபா 3,850 மில்லியன் ஒதுக்கீடு, ரூபா 5,000 மில்லியனாக அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த தடவை வடக்கு மாகாணத்துக்கு பிச்சை இல்லை! வடக்கு மாகாணத்திற்கு எந்த நிதியும் இந்த முறை பாதீட்டில் குறிப்பிட்ட அளவாக ஒதுக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றஞ்சாட்டியுள்ளார்
இது தொடர்பில் விரிவான விடயங்கள் கீழுள்ள காணொளியில்......
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |