பாதுக்க பகுதியில் பேருந்து விபத்து! 21 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
Colombo
Western Province
By Kathirpriya
பாதுக்க – துன்னான பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 21 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாராம்மல பகுதியிலிருந்து பாடசாலை மாணவர்களுடன் ஹோமாகம நோக்கி பயணித்த பேருந்து ஒன்றுடன் பின்னால் வந்த பேருந்து மோதுண்டமையினால் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் பாடசாலை மாணவர்கள் 21 பேரும் ஆசிரியை ஒருவரும் காயமடைந்த நிலையில் பாதுக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை இன்றைய காலை நேர செய்தி தொகுப்பில் காண்க.
மரண அறிவித்தல்